Saturday, January 21, 2006

அன்பு என்றொரு மூலிகை - 1

"என்னங்க, நீங்க ஆஃபிஸ் போகும் போது என்னை சுமதி வீட்டுல விட்டுட்டுப் போறீங்களா.." என்றாள் கவிதா, கணவனின் கழுத்து 'டை'யை சரி செய்துவிட்டுக்கொண்டே.

"என்னது, சுமதி வீட்டுக்கா..? அம்மா மட்டும் இங்கே தனியாய் இருப்பாங்களே.." என்றான் மோகன் 'மதிய உணவை' கையிலெடுத்தவாறே.

"அதாங்க பிரசினையே, அவங்க ஒண்ணு பேச, நான் ஒண்ணு பேச - அவாய்ட் பண்ணனும்னு தாங்க நான் போறேன்''

"இதோ பார், இது பிரச்னையை இன்னும் அதிகமாக்காமல் இருந்தால் சரி, ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சு போறது தான் நல்லது.எத்தனை நாளைக்குத்தான் இப்படி அவாய்ட் பண்ணிட்டிருப்பீங்க ரெண்டு பேரும்."
பேசிக்கொண்டிருக்கும் போதே, அம்மா ஹாலுக்குள் வந்துவிட, அவசரமாக பேச்சை மாற்றுகிறான்"சுமதியோட அக்கா வெளிநாட்டுலருந்து வந்திருக்கா, பார்க்கப்போகணும்னு தானே சொல்றே, அதை நீயே அம்மாக்கிட்ட சொல்லிட்டு போக வேண்டியது தானே.."

"என்னப்பா மோகன்" - அம்மா

"ஒண்ணுமில்லம்மா, இவளோட கிளாஸ் மேட் சுமதி இருக்காளே, அவளோட அக்கா வெளிநாட்டுலருந்து வந்திருக்காளில்லியா, அவளைப் பார்க்க போகணும்னு சொல்லிட்டிருக்கா"

"அதுக்கென்ன, தாராளமாகப் போகட்டும், இங்க எல்லாம் என்னைக் கேட்டுத்தான் நடக்குதா, என்ன?"

அம்மாவின் இந்த வார்த்தைகளே போதும் என்பது போல, கணவன் மனைவி இருவருமாக வெளியே புறப்பட்டு மோகன் தன் இரு சக்கர வாகனத்தை 'ஸ்டார்ட்' செய்து துவங்க ...கவிதா பின்னிருக்கையில் தொற்றிக்கொள்கிறாள்.

கவிதாவுக்கு மாமியார் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே பிடிப்பதில்லை. கல்யாணம் ஆன புதிதில் இப்படியில்லை.ஒருவருக்கொருவர் அனுசரணையாகத்தான் இருந்தார்கள். ஆனால் படிப்படியாகத் தான் 'நின்றால் குற்றம்; உட்கார்ந்தால் குற்றம்' என்று மாமியார் குற்றம் பிடிக்கத் தொடங்கி விட்டதாக உணர்ந்தாள்.

மோகன் அன்பானவன் தான். ஆனால் அலட்சியமானவன். அவனிடம் சொல்வது பலனில்லாதது. "இதெல்லாம் 'ஜெனெரேஷன் கேப்' தான். ஒருத்தரோட அருமையை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டா இதெல்லாம் ஒரு ப்ராப்ளமேயில்ல" என்பான். இருக்கலாம். ஆனால் இந்த மாமியார் கிழவிக்கு தன்னுடைய அருமையை எப்படி புரிய வைப்பது என்று தான் கவிதாவுக்கு விளங்கவில்லை.

கல்யாணம் ஆகி நாலு வருடமாகியும் இன்னும் குழந்தை பேறில்லாததும் இவளுக்கு எதிரானதாக அமைந்து விட்டது. எதிர்வீட்டு ராஜி பாட்டி தான் வரும்போதெல்லாம் மாமியார் கிழவியை உசுப்பிவிடுகிறாள். "ஏண்டி, ராதா, உன் மருமக இன்னும் ஒரு சேதியும் சொல்லலியா.....?"சுமதியிடம் ஆலோசனை கேட்கலாம் என்றால்...ஏதாவது உளறுவாள்: "சிம்பிள், நீ ஏன் தனிக்குடித்தனம் போகக் கூடாது..?" சான்சேயில்லை, இந்த எண்ணம் மோகனுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான், இந்த மாதிரி எண்ணமெல்லாம் வைத்திருந்தால் உன் வழியைப் பார்த்துக்கொண்டு போ" என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கத்தரித்து விடுவான். என்ன தான் செய்வது.. - கவிதா மனதிற்குள் குழம்பிக்கொண்டிருந்தாள்.

கல்யாணம் ஆகி நாலு வருடமாகியும் இன்னும் குழந்தை பேறில்லாததும் இவளுக்கு எதிரானதாக அமைந்து விட்டது.
எதிர்வீட்டு ராஜி பாட்டி தான் வரும்போதெல்லாம் மாமியார் கிழவியை உசுப்பிவிடுகிறாள். "ஏண்டி, ராதா, உன் மருமக இன்னும் ஒரு சேதியும் சொல்லலியா.....?"

சுமதியிடம் ஆலோசனை கேட்கலாம் என்றால்...ஏதாவது உளறுவாள்: "சிம்பிள், நீ ஏன் தனிக்குடித்தனம் போகக் கூடாது..?"
சான்சேயில்லை, இந்த எண்ணம் மோகனுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான், இந்த மாதிரி எண்ணமெல்லாம் வைத்திருந்தால் உன் வழியைப் பார்த்துக்கொண்டு போ" என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கத்தரித்து விடுவான். என்ன தான் செய்வது.. - கவிதா மனதிற்குள் குழம்பிக்கொண்டிருந்தாள். (தொடரும்...)

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet:
4