அன்பு என்றொரு மூலிகை -2
"நீ ஏன் டைவோர்ஸ் பண்ணக்கூடாது?" என்றாள் பாரீஸிலிருந்து வந்திருந்த சங்கீதா, சுமதியின் அக்காள்.
"ஐயோ, அக்கா, என்ன சொல்றே நீ? எனக்கும் மோகனுக்கும் எந்தப்பிரச்னையுமில்லை, மோகனை இழக்கவும் நான் தயாரில்லே..." என்றாள் கவிதா. " இதென்ன பிரான்ஸுன்னு நெனச்சுட்டியா.."
"பிரசினையை நாம் தீர்த்துடனும், இல்லேன்னா பிரசினை நம்மளை தீர்த்துடும்" என்ற சங்கீதா அடுத்து சொன்னதைக்கேட்டு கவிதா அதிர்ந்துத் தான் போனாள்.
வெளியூரிலிருந்து வந்திருந்த ஒரு மூலிகைச் சித்தர் தனக்கு நன்கு தெரிந்தவர் என்றும் அவரைச் சந்தித்துத் தம் ஆலோசனையைச் செயல் படுத்தலாம் என்றும் சங்கீதா சொன்னாள்.
"பிரச்சனை ஏதும் வந்து விடாதே" என்று அரை மனதுடன் சித்தரைச் சந்திக்க கவிதா புறப்பட்டாள்.
மூலிகைச் சித்தர் புன்முறுவலித்து "ஒரு உயிரைக் காப்பத்தறதுக்குத்தாம்மா இது வரை மூலிகை கொடுத்திருக்கேன். முதல் தடவையா ஒரு உயிரைக் கொல்றதுக்காக மூலிகை கேக்கறவங்கள பார்க்கிறேன்"
" ஆங்.. வந்து, என்னோட பிரச்னையை முழுசா சொல்லிட்டேன் அய்யா, நீங்கள் தான் புரிஞ்சுக்கணும்" என்றாள் கவிதா, சிறு நடுக்கத்துடன்.
மூலிகைச் சித்தர் சற்று நேரம் யோசித்தார்-கண்களை மூடிக்கொண்டார்-மனதிற்குள்ளாக ஏதேதோ பேசியவர் பின் தன் கண் திறந்து கவிதாவைப் பார்த்து சினேகமாகச் சிரித்தார்
" சரி, ஒரு மெதுவாக வினையாற்றுகிற ஒரு மூலிகையை உனக்குத்தருகிறேன். காலப்போக்கில் தான் அது தன் வேலையைக்காட்டும். 'மருந்து' என்று சொல்லி அதை உன் மாமியாருக்கு கொடுத்து வா. ஆனால் உன் மீது பிறகு பழி வராமலிருப்பது முக்கியம். அதனால், மாமியாரிடம் அன்பாக இருப்பது போல் நீ கடைசிவரை நடித்து வர வேண்டும், உன்னால் முடியுமா...?"
'எ(த்)தை தின்றால் பித்தம் தெளியும்?' என்ற மனநிலையில் கவிதா சொன்னாள்: 'அது ஒண்ணும் பிரசினையில்லை அய்யா"
"அப்ப சரி.."
உற்சாகமாக வீட்டுக்கு வந்த கவிதா, தன் மாமியார் இருக்கிறாரா என்று ஓரக்கண்ணால் வீட்டைத் துழாவினாள். காணவில்லை. சமயலறைப் பக்கம் மெதுவாக வந்தவளுக்கு பின்னறையிலிருந்து மாமியார் முனகிகொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
'அன்பு காட்டுவது போல் நடி' - மூலிகைச் சித்தர் நினைவுக்கு வந்தார். கூடவே மூலிகையும் தான்.
"ஐயோ அத்தை, என்ன செய்யறது உங்களுக்கு..." தன் குரல் தனக்கே கேட்காத தொனியில் கேட்டுக்கொண்டு உள் நுழைந்தவள் மாமியாரின் நெற்றியில் கை வைத்துப் பார்க்க அனலாய் கொதித்தது.
மாமியாரால் தன் கண்ணையே நம்ப முடியவில்லை."வாடி..ம்மா வா, இப்பத்தான் வறியா.." என்றவர் சகித்துக்கொண்டு சொன்னார் " ஒம்வேலையப்பாரு, நான் எக்கேடு கெட்டாலென்ன..."
"அய்யோ அத்தை, உங்க கோபத்தையெல்லாம் அப்புறம் காட்டுங்க..... உடம்பு சரியில்லாத நேரத்தில கண்டதையும் யோசிக்காம மருந்து குடிங்க"தன் நடிப்பை தானே மெச்சிக்கொண்டு ' மூலிகை மருந்தை' கலந்து வந்த கவிதா மாமியாருக்கு மெதுவாக புகட்டலானாள். (தொடரும்...)
"ஐயோ, அக்கா, என்ன சொல்றே நீ? எனக்கும் மோகனுக்கும் எந்தப்பிரச்னையுமில்லை, மோகனை இழக்கவும் நான் தயாரில்லே..." என்றாள் கவிதா. " இதென்ன பிரான்ஸுன்னு நெனச்சுட்டியா.."
"பிரசினையை நாம் தீர்த்துடனும், இல்லேன்னா பிரசினை நம்மளை தீர்த்துடும்" என்ற சங்கீதா அடுத்து சொன்னதைக்கேட்டு கவிதா அதிர்ந்துத் தான் போனாள்.
வெளியூரிலிருந்து வந்திருந்த ஒரு மூலிகைச் சித்தர் தனக்கு நன்கு தெரிந்தவர் என்றும் அவரைச் சந்தித்துத் தம் ஆலோசனையைச் செயல் படுத்தலாம் என்றும் சங்கீதா சொன்னாள்.
"பிரச்சனை ஏதும் வந்து விடாதே" என்று அரை மனதுடன் சித்தரைச் சந்திக்க கவிதா புறப்பட்டாள்.
மூலிகைச் சித்தர் புன்முறுவலித்து "ஒரு உயிரைக் காப்பத்தறதுக்குத்தாம்மா இது வரை மூலிகை கொடுத்திருக்கேன். முதல் தடவையா ஒரு உயிரைக் கொல்றதுக்காக மூலிகை கேக்கறவங்கள பார்க்கிறேன்"
" ஆங்.. வந்து, என்னோட பிரச்னையை முழுசா சொல்லிட்டேன் அய்யா, நீங்கள் தான் புரிஞ்சுக்கணும்" என்றாள் கவிதா, சிறு நடுக்கத்துடன்.
மூலிகைச் சித்தர் சற்று நேரம் யோசித்தார்-கண்களை மூடிக்கொண்டார்-மனதிற்குள்ளாக ஏதேதோ பேசியவர் பின் தன் கண் திறந்து கவிதாவைப் பார்த்து சினேகமாகச் சிரித்தார்
" சரி, ஒரு மெதுவாக வினையாற்றுகிற ஒரு மூலிகையை உனக்குத்தருகிறேன். காலப்போக்கில் தான் அது தன் வேலையைக்காட்டும். 'மருந்து' என்று சொல்லி அதை உன் மாமியாருக்கு கொடுத்து வா. ஆனால் உன் மீது பிறகு பழி வராமலிருப்பது முக்கியம். அதனால், மாமியாரிடம் அன்பாக இருப்பது போல் நீ கடைசிவரை நடித்து வர வேண்டும், உன்னால் முடியுமா...?"
'எ(த்)தை தின்றால் பித்தம் தெளியும்?' என்ற மனநிலையில் கவிதா சொன்னாள்: 'அது ஒண்ணும் பிரசினையில்லை அய்யா"
"அப்ப சரி.."
உற்சாகமாக வீட்டுக்கு வந்த கவிதா, தன் மாமியார் இருக்கிறாரா என்று ஓரக்கண்ணால் வீட்டைத் துழாவினாள். காணவில்லை. சமயலறைப் பக்கம் மெதுவாக வந்தவளுக்கு பின்னறையிலிருந்து மாமியார் முனகிகொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
'அன்பு காட்டுவது போல் நடி' - மூலிகைச் சித்தர் நினைவுக்கு வந்தார். கூடவே மூலிகையும் தான்.
"ஐயோ அத்தை, என்ன செய்யறது உங்களுக்கு..." தன் குரல் தனக்கே கேட்காத தொனியில் கேட்டுக்கொண்டு உள் நுழைந்தவள் மாமியாரின் நெற்றியில் கை வைத்துப் பார்க்க அனலாய் கொதித்தது.
மாமியாரால் தன் கண்ணையே நம்ப முடியவில்லை."வாடி..ம்மா வா, இப்பத்தான் வறியா.." என்றவர் சகித்துக்கொண்டு சொன்னார் " ஒம்வேலையப்பாரு, நான் எக்கேடு கெட்டாலென்ன..."
"அய்யோ அத்தை, உங்க கோபத்தையெல்லாம் அப்புறம் காட்டுங்க..... உடம்பு சரியில்லாத நேரத்தில கண்டதையும் யோசிக்காம மருந்து குடிங்க"தன் நடிப்பை தானே மெச்சிக்கொண்டு ' மூலிகை மருந்தை' கலந்து வந்த கவிதா மாமியாருக்கு மெதுவாக புகட்டலானாள். (தொடரும்...)
0 Comments:
Post a Comment
<< Home