அன்பு என்றொரு மூலிகை - இறுதிப் பகுதி
இத்தனை நாளாய் இல்லாமல் திடீரென்று வந்த தலைவலி ராதா அம்மையாருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதைவிட ஆச்சரியம் மருமகளின் திடீர் கரிசனம். இதுப்போல் கரிசனம் காட்டுவாளென்றால் தினம் தினம் தலைவலி வந்தால் கூட தாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தார்.
தினமும் மூலிகை மருந்தை கவிதா தன் மாமியாருக்கு புகட்டி வந்தாலும் அது நச்சு என்று நினைக்கும் போதெல்லாம் அவளுக்கு குற்ற உணர்வு மனதை உறுத்தவே செய்தது. மாமியாருக்கு முதுமையின் காரணமாக தள்ளாமை ஏற்பட்டாலும் 'தான்' தான் காரணமோ என்று உள்ளுக்குள் பதைத்துப்போனாள்.
அதை விட மாமியாரிடமிருந்து திரும்பப் பெறும் அன்பும் அவளைத் திக்குமுக்காட்டியது.ஒரு முறை மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தப் போது கேட்டே விட்டாள்:"அத்தை, தப்பா நினைக்கலேன்னா சொல்லுங்க, எனக்கு குழந்தை இன்னும் பிறக்கலையேன்னு உங்களுக்கு வருத்தமில்லையா....? என் பேர்ல உங்களுக்கு கோவம் வரல்லியா.....?
"அடி அசடே, இப்பவாச்சும் மனசு விட்டு கேட்டுட்டியே, தான் பேரப்பிள்ளகள எடுத்துக்கொஞ்சணும்னு எந்த அம்மாவுக்குத்தான் ஆசையிருக்காது. அந்த விஷயத்துல வருத்தமில்லேன்னு சொல்ல மாட்டேன்.ஆனா அதுக்கு நீ என்னம்மா செய்வாய்? கடவுளுக்கு எப்ப கொடுக்கணும்னு தோணுதோ அப்ப கொடுக்கட்டும். இதுக்காகவெல்லாம் கோபப்பட முடியுமா? பேரப்பிள்ளைகள் இல்லாவிட்டாலும் ஒரு 'மகள்' போல நீ என்னை கவனிச்சுக்கறத நினைத்தால் மகள் இல்லாத குறையை இத்தனை நாளுக்கு அப்புறம் கடவுள் போக்கிட்டான்னு நெனச்சுக்கறேனம்மா.." என்றார் மாமியார்.
கவிதா உள்ளுக்குள் உடைந்துப் போனாள். இப்படி ஒரு 'அம்மா' இருக்கும் போது தான் மகள் போல நடந்துக்கொள்ளவில்லையே என்று மருகினாள். உளப்பூர்வமாக உருகினாள். குற்ற உணர்வு அதிகரித்து தூக்கம் வராமல் தவித்தாள். என்ன ஏது என்று கேட்ட மோகனுக்கும் சரிவர பதிலளிக்க இயலாமல் திணறினாள். காலை முதல் வேலையாக அந்த மூலிகைச்சித்தரைச் சந்தித்து 'நச்சு முறிவு' மூலிகை வாங்கி வர வேண்டும் என்று தீர்மானித்தாள்.
மூலிகைச்சித்தர் வழக்கமான தன் புன்முறுவலுடன் கவிதாவை எதிர்கொண்டார்
"வாம்மா! என்ன நீ மட்டும் வந்திருக்கே..." கவிதா உடைந்துப்போனாள். கண்ணீருடன் தன் மடத்தனத்தை சாடினாள். உடனடியாக நச்சுமுறிவுக்கு மருந்து தரும்படி கெஞ்சினாள்.
"அவசியமில்லேம்மா! நான் கொடுத்தது 'நச்சு' ஒண்ணுமில்லே. உன் பிரசினை என்னன்னு புரிஞ்சிக்கிட்டு 'நீ அன்பாக நடந்துக்கணும்னு தான் அப்படி ஒரு மூலிகையைத்தந்தேன்" ஆச்சரியம் விலகாமல் பார்த்தவளிடம் சொன்னார்: " அந்த மூலிகை அருந்தியவங்களை விடவும் புகட்டுகிறவங்களுக்கு அதிக பலன் தருமம்மா, ஏன்னா அதும் பேரு 'அன்பு'.
குறிப்பு: இந்தக் கதை என் நண்பர் ஒருவரின் துணையுடன் எழுதப் பட்டது. அவரின் அனுமதியுடனேயே இதனைப் பதிகிறேன். நன்றி..
தினமும் மூலிகை மருந்தை கவிதா தன் மாமியாருக்கு புகட்டி வந்தாலும் அது நச்சு என்று நினைக்கும் போதெல்லாம் அவளுக்கு குற்ற உணர்வு மனதை உறுத்தவே செய்தது. மாமியாருக்கு முதுமையின் காரணமாக தள்ளாமை ஏற்பட்டாலும் 'தான்' தான் காரணமோ என்று உள்ளுக்குள் பதைத்துப்போனாள்.
அதை விட மாமியாரிடமிருந்து திரும்பப் பெறும் அன்பும் அவளைத் திக்குமுக்காட்டியது.ஒரு முறை மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தப் போது கேட்டே விட்டாள்:"அத்தை, தப்பா நினைக்கலேன்னா சொல்லுங்க, எனக்கு குழந்தை இன்னும் பிறக்கலையேன்னு உங்களுக்கு வருத்தமில்லையா....? என் பேர்ல உங்களுக்கு கோவம் வரல்லியா.....?
"அடி அசடே, இப்பவாச்சும் மனசு விட்டு கேட்டுட்டியே, தான் பேரப்பிள்ளகள எடுத்துக்கொஞ்சணும்னு எந்த அம்மாவுக்குத்தான் ஆசையிருக்காது. அந்த விஷயத்துல வருத்தமில்லேன்னு சொல்ல மாட்டேன்.ஆனா அதுக்கு நீ என்னம்மா செய்வாய்? கடவுளுக்கு எப்ப கொடுக்கணும்னு தோணுதோ அப்ப கொடுக்கட்டும். இதுக்காகவெல்லாம் கோபப்பட முடியுமா? பேரப்பிள்ளைகள் இல்லாவிட்டாலும் ஒரு 'மகள்' போல நீ என்னை கவனிச்சுக்கறத நினைத்தால் மகள் இல்லாத குறையை இத்தனை நாளுக்கு அப்புறம் கடவுள் போக்கிட்டான்னு நெனச்சுக்கறேனம்மா.." என்றார் மாமியார்.
கவிதா உள்ளுக்குள் உடைந்துப் போனாள். இப்படி ஒரு 'அம்மா' இருக்கும் போது தான் மகள் போல நடந்துக்கொள்ளவில்லையே என்று மருகினாள். உளப்பூர்வமாக உருகினாள். குற்ற உணர்வு அதிகரித்து தூக்கம் வராமல் தவித்தாள். என்ன ஏது என்று கேட்ட மோகனுக்கும் சரிவர பதிலளிக்க இயலாமல் திணறினாள். காலை முதல் வேலையாக அந்த மூலிகைச்சித்தரைச் சந்தித்து 'நச்சு முறிவு' மூலிகை வாங்கி வர வேண்டும் என்று தீர்மானித்தாள்.
மூலிகைச்சித்தர் வழக்கமான தன் புன்முறுவலுடன் கவிதாவை எதிர்கொண்டார்
"வாம்மா! என்ன நீ மட்டும் வந்திருக்கே..." கவிதா உடைந்துப்போனாள். கண்ணீருடன் தன் மடத்தனத்தை சாடினாள். உடனடியாக நச்சுமுறிவுக்கு மருந்து தரும்படி கெஞ்சினாள்.
"அவசியமில்லேம்மா! நான் கொடுத்தது 'நச்சு' ஒண்ணுமில்லே. உன் பிரசினை என்னன்னு புரிஞ்சிக்கிட்டு 'நீ அன்பாக நடந்துக்கணும்னு தான் அப்படி ஒரு மூலிகையைத்தந்தேன்" ஆச்சரியம் விலகாமல் பார்த்தவளிடம் சொன்னார்: " அந்த மூலிகை அருந்தியவங்களை விடவும் புகட்டுகிறவங்களுக்கு அதிக பலன் தருமம்மா, ஏன்னா அதும் பேரு 'அன்பு'.
குறிப்பு: இந்தக் கதை என் நண்பர் ஒருவரின் துணையுடன் எழுதப் பட்டது. அவரின் அனுமதியுடனேயே இதனைப் பதிகிறேன். நன்றி..
0 Comments:
Post a Comment
<< Home